600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
பாலிவுட்டின் பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகர், ‛ஏ தில் ஹே முஷ்கில்' படத்தை இயக்கி வருகிறார். இதில் ரன்பீர்கபூர், ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா ஆகியோர் முக்கியமான ரோலில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இருதினங்களுக்கு முன்னர் இப்படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது. டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆனால் அமிதாப் குடும்பத்தினர் இடையே சற்று சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏன்...?, எதற்காக...?
‛ஏ தில் ஹே முஷ்கில்' படத்தில் ஐஸ்வர்யாவும், ரன்பீரும் மிகவும் நெருக்கமாக நடித்துள்ளனர். இந்த காட்சிகளை பார்த்துவிட்டு அபிஷேக், அமிதாப்பச்சன் உள்ளிட்ட குடும்பத்தார் ஐஸ்வர்யா ராய் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்களாம்.
இதனிடையே இப்படத்தின் கதையை சொல்லும்போதே இதுபோன்ற காட்சிகள் எல்லாம் இருக்கிறது என்று ஐஸ்வர்யா குடும்பத்தினரிடம் கரண் ஜோகர் கூறியதாகவும், ஆனால் அப்போது யாரும் எதிர்ப்பு தெரிக்கவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் படம் ரிலீஸாகும் போது ரன்பீர்-ஐஸ்வர்யா இருக்கும் நெருக்கமான காட்சிகளை நீக்கும்படி அமிதாப் குடும்பத்தார் தரப்பிலிருந்து கேட்டு கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.