பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
அரிமாநம்பி பட இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'இருமுகன்'. கேரளாவைச் சேர்ந்த பிரபல விநியோகஸ்தரும், விஜய் நடித்த 'புலி' படத்தைத் தயாரித்தவருமான ஷிபு தமீன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் விக்ரம்.
விக்ரம் ஏற்றுள்ள இரண்டு கதாபாத்திரங்களில் ஒன்று...... வழக்கமான ஆக்ஷன் ஹீரோ வேடம். மற்றொன்று, திருநங்கை வேடம். இந்த வேடம்தான் படத்தில் வில்லன். இப்படத்தில் கதாநாயகிகளாக நயன்தாரா, நித்யா மேனன் இருவரும் நடித்துள்ளனர். இருமுகன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வாழங்கப்பட்டுள்ளதை அடுத்து உலகமெங்கும் செப்டம்பர் 8 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
படம் வெளியாக இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில் இருமுகன் பற்றி புதிய தகவல் ஒன்று கோடம்பாக்கத்தில் பரவிவருகிறது. அதாவது சில வருடங்களுக்கு முன் அமீர் இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்த ஆதிபகவன் படத்தின் கதையும் இருமுகன் படத்தின் கதையும் ஒன்றுதானாம்.
ஆதிபகவன் படத்தில் ஜெயம்ரவி ஏற்று நடித்த திருநங்கை கதாபாத்திரம்தான் வில்லன். இருமுகன் படத்திலும் அப்படியே. ஏற்கனவே வெளியகி படு தோல்வியடைந்த கதையை யாராவது மீண்டும் எடுப்பார்களா? பல வருடங்களுக்கு விக்ரமிடம் இந்தக்கதையை சொல்லி இருந்தாராம் அமீர். பிறகு என்ன காரணத்தினாலோ அந்தப்படம் அப்போது ட்ராப்பாகிவிட்டது.
பல வருடங்களுக்கு முன் அமீர் சொன்ன லைனை மறக்காத விக்ரம், அதை ஆனந்த் சங்கரிடம் சொல்லி டெவலப் பண்ண சொல்லி இருக்கிறார். போதை பொருள் கடத்தல் என்பதை கெமிக்கல் சம்பந்தப்பட்ட கதையாக மாற்றி இருமுகன் படத்தை ஆக்ஷன் த்ரில்லர் படமாக்கியுள்ளாராம் ஆனந்த் சங்கர்.