தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
1980ம் ஆண்டு ஷாலினி என்ட கூட்டுகாரி என்ற மலையாளப் படத்தின் மூலம் அறிமுகமானவர் சாந்தி கிருஷ்ணா. பன்னீர் புஷ்பங்கள் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். அதன் பிறகு சிவப்பு மல்லி, சிம்லா ஸ்பெஷல், மணல் கயிறு, அன்புள்ள மலரே, நேருக்கு நேர் படங்களில் நடித்தார். மலையாளத்தில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மணல் கயிறு இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.
இவர் 1984ம் ஆண்டு மலையாள நடிகர் ஸ்ரீநாத்தை திருமணம் செய்து கொண்டார். 11 வருட தாம்பத்திய வாழ்க்கைக்கு பிறகு அவரை விவாகரத்து செய்து விட்டார். அதன்பிறகு 1998ம் ஆண்டு கோல்கட்டாவை சேர்ந்த தொழில் அதிபர் பஜோர் சதாசிவம் என்பவரை திருமணம் செய்தார். இவர்கள் தற்போது பெங்களூருவில் வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவது கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு பெங்களூரு குடும்ப நல கோர்ட்டில் சாந்தி கிருஷ்ணா மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து அளித்து உத்தரவிட்டது. தற்போது மணல் கயிறு இரண்டாம் பாகத்தில் நடித்து வரும் சாந்தி கிருஷ்ணா மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார்.