இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர் ஸ்ரீஜித் ரவி. இவர் நடிக்கும் படம் ஒன்றின் படப்பிடிப்பு கேரள மாநிலம் ஒட்டப்பாலத்தில் நடந்து வருகிறது. படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க பள்ளி மாணவிகள் சிலர் சென்றுள்ளனர். அவர்கள் ஸ்ரீஜித் ரவியை சந்தித்து ஆட்டோகிராப் கேட்டுள்ளனர்.
அப்போது ஸ்ரீஜித் ரவி அவர்களிடம் ஆபாசமாக பேசியதுடன், ஆபாச போஸ்சும் கொடுத்ததாகவும், மாணவிகளை தனித்தனியாக செல்போனில் படம் எடுத்ததுடன் அவர்களை வலுக்கட்டாயமாக கட்டிபிடித்தபடி செல்பியும் எடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட மாணவிகள், தங்களுடைய பள்ளி முதல்வரிடம் விஷயத்தை கூறி அழுதுள்ளனர். இதைத் தொடர்ந்து பள்ளி முதல்வர், ஸ்ரீஜித் ரவி மீது போலிசில் புகார் அளித்தார். போலீசார் ஸ்ரீஜித்தை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனாலும் ஸ்ரீஜித் ரவி தன்மீதான குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார். அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.