வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் |
தமிழ் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தாலும் நாடக காவலராக விளங்கியவர் ஆர்.எஸ்.மனோகர். நாடகத்திலிருந்து சினிமாவிற்கு வந்தாலும் தனது கடைசி காலம் வரை நாடகத்தை கைவிடாதவர். சினிமாவில் தொடர்ந்து தனித்தன்மை வாய்ந்த வில்லனாக வலம் வந்தார். மார்டன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் செல்லப்பிள்ளையாக இருந்து அந்த நிறுவனத்தின் 18 படங்களில் நடித்தார்.
ஆயிரத்தில் ஒருவன், அடிமைப்பெண், பல்லாண்டு வாழ்க, காவல்காரன், இதயக்கனி, உலகம் சுற்றும் வாலிபன் படங்களில் டெரர் வில்லனாக நடித்தார். வண்ணக்கிளி, கைதி கண்ணாயிரம், வல்லவனுன்கு வல்லவன் போன்ற ஏராளமான படங்களில் குணசித்திர வேடத்திலும் நடித்தார். தொடர்ந்து நாடகத்தில் நடித்தால் சினிமாவில் அதிக கவனம் செலுத்தவில்லை.
புராண நாடகங்கள் நடத்துவதில் கைதேர்ந்தவராக இருந்தார். நவீன வசதிகள் எதுவும் இல்லாத காலத்தில் நாடக மேடையில் இரட்டை வேடங்களை கொண்டு வந்தார். யானைகளை நாடக மேடையேற்றி நடிக்க வைத்தார். கடலைகூட மேடைக்கு கொண்டு வந்தார்.
இலங்கேஸ்வரன், சாணக்கிய சபதம், சிசுபாலன், இந்திரஜித், நரகாசுரன், திருநாவுக்கரசர் ஆகிய நாடகங்கள் இப்போதும் அவர் பெயரை சொல்லிக் கொண்டிருக்கின்றன. இவரின் இலங்கேஸ்வரன் நாடகம் உலகம் முழுவதும் நடத்தப்பட்டது. 1800 மேடைகளை கண்டது அந்த நாடகம். ராமாயணத்தின் வில்லன் கதாபாத்திரமான இலங்கேஸ்வரனை ஹீரோவாக மாற்றி புரட்சி செய்தார். இலங்கையில் ஒரே மேடையில் 21 நாட்கள் இந்த நாடகம் தொடர்ச்சியாக நடத்தப்பட்டது சரித்திர சாதனையாகும்.