ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விக்ரம் பிரபு, ஷாம்லி, ரோபோ சங்கர், யோகிபாபு நடித்துள்ள படம் வீரசிவாஜி. மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் நந்தகுமார் தயாரிக்கிறார். கணேஷ் விநாயக் இயக்குகிறார், சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இமான் இசை அமைக்கிறார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்றுமுன்தினம் இரவு நடந்தது.
இதில் கலந்து கொள்ள வந்திருந்த விக்ரம் பிரபு அளித்த பேட்டி: இமானுடன் நான் பணியாற்றும் 5வது படம் இது. ஒரே மாதிரியாக நடிக்க கூடாது என்பதால் படத்திற்கு படம் வித்தியாசம் தர முயற்சிக்கிறேன். சில நேரங்களில் அந்த முயற்சி தவறாகவும் போய்விடுகிறது. அதிலிருந்து நல்ல அனுபவங்களை பெற்றுக் கொள்கிறேன். இது ஒரு ஆக்ஷன் கதை. படத்தின் தலைப்பு வீரசிவாஜி என்று தாத்தாவின் பெயரைக் கொண்டிருந்ததால் முதலில் தயங்கினேன். பின்னர் அந்த பெயருக்குரிய உழைப்பை கொடுத்து விட்டால் சரியாகும் என்ற தைரியத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டேன்.
படத்தில் நான் கால் டாக்ஸி டிரைவராக நடிக்கிறேன். சமூத்தில் பல தவறுகள் நடக்கிறது. தட்டிக் கேட்க யாரும் இல்லை. ஒரு கால் டாக்சி டிரைவரால் எந்த அளவிற்கு அந்த பிரச்சினைக்குள் புகுந்து சரி செய்ய முடியுமோ அதை செய்கிற படம். காமெடி, செண்டிமெண்ட், ஆக்ஷன் எல்லாமே சம அளவில் கலந்து உருவாகி உள்ளது.
ஜோடியாக நடித்திருக்கும் ஷாம்லி சின்ன வயதிலிருந்தே நடிப்பதால் அவருடன் நடிக்க எளிமையாக இருந்தது. அதிலும் அவர் நன்றாக தமிழ் பேசக்கூடியவர். அதனால் உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டு நடித்தார். எப்போதுமே தமிழ் பேசத் தெரிந்த நடிகைகளுடன் நடிப்பது மிகவும் எளிதானது. மற்றவர்கள் வசனத்தை ஒப்பிப்பதிலேயே கவனம் செலுத்துவதால் நடிப்பில் கோட்டை விடுவார்கள். ஷாம்லி என் தங்கையின் தோழி. அந்த வகையில் அவர் இன்னும் எனக்கு நெருக்கம். அடுத்து முடிசூடா மன்னன் படத்தில் நடிக்கிறேன். அது வித்தியாசமான கதை களத்தை கொண்டது. என்றார் விக்ரம் பிரபு.