பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
யாரோ ஒரு நடிகருக்காக தயார் செய்யப்பட்ட கதை ஒன்று சில காரணங்களால் சம்பந்தப்பட்ட நடிகர் நடிக்கமுடியாமல் போய், பின் சாதாரண நிலையில் உள்ள ஹீரோ நடித்து ஹிட்டாகி அந்த நடிகருக்கு வாழ்க்கையே தந்த வரலாறு எல்லா மொழி திரையுலகிலும் நிறைய இருக்கும்.. சாதாரண இரண்டாம் நிலை நடிகராக இருந்த திலீப்புக்கும் அப்படி ஒரு நிகழ்வு நடந்தது. 2004ஆம் வருடம் திலீப், காவ்யா மாதவன் நடித்து சூப்பர்ஹிட்டான 'ரன்வே' என்கிற படம் வெளியானது. இந்தப்படத்தை ஆக்சன் இயக்குனரான ஜோஷி இயக்கினார்.
இதில் திலீப் வாளையார் பரமசிவம் என்கிற கேரக்டரில் நடித்திருந்தார். இந்த கேரக்டர்தான் திலீப்பை முன்னணி ஹீரோவாக மாற்றியதுடன் அவர் கமர்ஷியல் படங்களுக்கும் பொருந்துவார் என நிரூபித்தது. ஆனால் இந்த கதை முதலில் சென்றது மம்முட்டியிடம் தான். ஆம் இதன் கதாசிரியர்களான உதயகிருஷ்ணாவும் சிபி கே.தாமஸும் இந்த கதையை பாலு கரியத் என்கிற இயக்குனரிடம் சொல்ல, அவர் அதை மம்முட்டிக்கு சொல்லி ஒகே பண்ணினார். பாலு கரியத்தின் அண்ணனே இந்தப்படத்தை தயாரிப்பதாக முடிவானது.. அனால் அந்த சமயத்தில் அவரது தயாரிப்பில் வெளியான படம் ஒன்று நட்டத்தை சந்திக்க, இந்தப்படத்தை தயாரிக்காமல் கைவிட்டு விட்டார்களாம். அதன்பின் இந்த கதை இயக்குனர் ஜோஷியிடம் போக, அவர் திலீப்பை ஹீரோவாக்கி, படத்தையும் மாஸ் ஹிட்டாக்கி விட்டார்.