ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டின் பிரபல நடிகரான சஞ்சய் தத், சிறைவாசம் சென்று வந்த பின்னர் மீண்டும் படப்பிடிப்புகளில் பிஸியாக தொடங்கியிருக்கிறார். இதனிடைய சல்மானை தன்னுடைய சகோதரர் என்று அடிக்கடி கூறி வருகிறார் சஞ்சய் தத். ஆனால் அவர் சிறையிலிருந்து வந்து மாதங்கள் பலவாகிவிட்டன. ஆனால் இதுவரை அவரை ஒருமுறை கூட போய் பார்க்கவில்லை சல்மான்கான். இதனால் சல்மான், சஞ்சய் இடையே பிரச்னை என்று ஒரு தகவல் வெளியானது.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சஞ்சய்சத்திடம், உங்களுக்கும், சல்மானுக்கும் ஏதோ பிரச்னையாமே என்று கேட்டபோது, அதற்கு பதிலளித்த சஞ்சய், ‛‛பிரச்னையா... என்ன பிரச்னை... யார் சொன்னது...? சல்மானின் கணபதி பூஜையில் நான் பங்கேற்றேன், ஆனால் அதைப்பற்றி யாருமே பேசவில்லை. ஆனால் நான் சிறை சென்று வந்தபின்னர் அவர் என்னுடைய வீட்டிற்கு வரவில்லை என்றதும் அதை பிரச்னையாக பார்க்கிறீர்கள். சல்மான் பிஸியான நடிகர், அவர் எப்போதும் ஷூட்டிங் ஷூட்டிங் என்றிருப்பவர். 24மணிநேரமும் அவர் என்னுடைய வீட்டில் இருக்க மாட்டார். அவர் எப்போதுமே என்னுடைய இளைய சகோதரர் தான்'' என்று கூறியுள்ளார்.