ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'காதல்' திரைப்படத்தின் பாடல்கள் என்றைக்கும் நம்மை விட்டு அகலாது. அந்த அளவிற்கு அந்தப் படத்தின் பாடல்கள் எவர் கீரீன் பாடல்களாக இசை ரசிகர்கள் மனதில் அழுத்தமாகப் பதிந்துவிட்டது. இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர், நா.முத்துக்குமார் கூட்டணியின் உருவான அந்தப் படத்தின் பாடல்கள் இன்றைக்கும் என்றைக்கும் காதலின் உணர்வுகளை அப்படியே வெளிச்சம் போட்டுக் காட்டின. அந்தப் படத்திற்குப் பிறகு இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதருக்கு தமிழ்த் திரையுலகில் ஒரு முக்கிய இடம் கிடைக்கும் என அனைவரும் சொன்னார்கள். ஆனால், சில தனிப்பட்ட பிரச்சனைகளால் அவரால் தொடர்ந்து படங்களில் பணியாற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
ஜோஷ்வா ஸ்ரீதர் தற்போது 25 படத்தை எட்டிப் பிடித்துள்ளார். விரைவில் வெளிவர உள்ள 'பறந்து செல்லவா' படம்தான் அவருடைய 25து படம். இந்தப் படத்திற்காகவும், இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதரின் 25வது படத்திற்காகவும் அவருடைய நண்பரான ஏ.ஆர்.ரகுமான் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் படக்குழுவினர் மெய்மறந்து போயுள்ளனர்.
“எனது அருமை நண்பர் ஜோஷ்வா ஸ்ரீதருக்கு வாழ்த்துகள், வெற்றிக்கும் அன்புக்கும் அவர் தகுதியானவர். 'பறந்து செல்லவா' படக்குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துகள்,” என ரகுமான் வாழ்த்தியதைக் கண்டு வானத்தில் பறந்து கொண்டிருக்கிறது படக்குழு.