பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
தமிழ்சினிமாவின் பழம்பெரும் நடிகை கேஆர் விஜயா. எம்ஜிஆர்., சிவாஜி, ஜெய்சங்கர், ஜெமினி உள்ளிட்ட அந்தகால ஜாம்பவான் நடிகர்களுடன் நடித்தவர். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் நடித்திருக்கிறார். இப்போதும் குணச்சித்திர வேடங்களில் அவ்வப்போது தலைகாட்டி வருகிறார். சிலமாதங்களுக்கு முன்னர் கேஆர் விஜயாவின் கணவர் காலமானார். அதனைத்தொடர்ந்து சில மாதங்களிலேயே கேஆர் விஜயா இறந்ததாக ஒரு வதந்தி பரவியது. ஆனால் பின்னர் தான் நலமுடன் இருக்கிறேன் என்று கேஆர் விஜயாவே பேட்டியளித்தார்.
இந்நிலையில் நேற்றும் நடிகை கேஆர் விஜயா மரணம் அடைந்துவிட்டது போன்று வதந்தி பரவியது. இதனால் திரையுலகினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டதோடு பலரும் அவரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் நலமுடன் இருப்பது உறுதியானது.
இதனிடையே கேஆர் விஜயா அளித்துள்ள பேட்டி ஒன்றில், ராதிகாவின் மகள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்லாம் என்று இருந்தேன். ஆனால் காலில் சுளுக்கு ஏற்பட்டதால் செல்ல முடியவில்லை. தற்போது நான் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறேன், எனக்கு ஒன்றும் இல்லை, நலமாக உள்ளேன். சிலர் வேண்டுமென்றே இதுபோன்ற வதந்திகளை பரப்பி வருகின்றனர். இதற்காக நான் வருத்தப்படவில்லை, யாரும் இதை நம்ப வேண்டாம். இதுபோன்ற வதந்திகள் என் ஆயுளை இன்னும் அதிகரிக்கத்தான் செய்யும். என் மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.