தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
காதல் என்பது, வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத இனிய அனுபவம்; அதை அனுபவிக்க, இனி காதலிக்க உள்ளேன், எனக்கூறியுள்ள, நடிகை காஜல் அகர்வால், காதலர் எப்படி இருக்க வேண்டும் என, பட்டியலிட்டு உள்ளார். அதோடு ஆண்கள், பெண்களை வீட்டு வேலை செய்ய வற்புறுத்த கூடாது, ஆண்களும் வீட்டு வேலைகள் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் காஜல்.
இதுகுறித்து, நடிகை காஜல் அகர்வால் விரிவாக கூறியதாவது: ஆண்களுக்கு இணையாக மட்டுமின்றி, அதிகமாகவும், பெண்கள் சம்பாதிக்க துவங்கி விட்டனர். இனி, பெண்கள் விஷயத்தில், ஆண்கள் தங்களது எண்ணங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இன்னும், பழைய மாதிரி பெண்களை வீட்டு வேலைகளை செய்ய வற்புறுத்தக் கூடாது; வீட்டு வேலைகளை ஆண்களும் செய்ய வேண்டும். நான், இதுவரை யாரையும் காதலிக்கவில்லை; காதல் என்பது, வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத இனிய அனுபவம்; அதை அனுபவிப்பதற்காக, இனி காதலிக்கலாம் என, உள்ளேன்.
காதலிக்க ராஜகுமாரன் தேவை இல்லை; எனக்கு பிடித்த ஜோடியாக இருந்தால் போதும்; அவர், யாராக இருந்தாலும் ஆட்சேபனை இல்லை. என் எண்ணங்களை நேசிப்பவராக, என் மீது முழு நம்பிக்கை வைப்பவராக இருக்க வேண்டும். அவரின் சொந்த வாழ்க்கையை விட, என் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் தர வேண்டும். என் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்; எப்போதும், நான் அவரைப் பற்றி யோசிக்கும் அளவுக்கு, மனதில் இடம் பிடிக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒருவரை காதலிப்பேன்; நானும் சாதாரண பெண் தான்; எனக்கும் கனவுகள் உண்டு.
இவ்வாறு அவர் கூறினார்.