பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
தனுஷ் நடித்த 3 படத்தில் இசையமைப்பாளரானவர் அனிருத். அந்த படத்தில் இடம்பெற்ற ஒய்திஸ் கொலவெறி -என்ற பாடல் உலகமெங்கிலும் பிரபலமாகி அவரை உச்சத்துக்கு கொண்டு சென்றது. அதையடுத்து எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, மான்கராத்தே, கத்தி, வேதாளம் என பல படங்களில் சூப்பர் ஹிட பாடல்களை கொடுத்து குறுகிய காலத்தில் முன்னணி இசையமைப்பாளரானார் அனிருத். அதனால் விரைவில் அவர் ரஜினி படத்திற்கும் இசையமைத்து விடுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ரஜினி நடித்த கபாலி படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளரானார். இந்நிலையில், தற்போது சிவகார்த்திகேயனின் ரெமோ மற்றும் அஜீத் தின் 57-வது படத்திற்கு இசையமைத்து வரும் அனிருத், மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் இசையமைக்க விடாமுயற்சி செய்ததின் காரணமாக அவருக்கு சாதகமான சூழ்நிலை உருவாகியிருக்கிறதாம். தற்போது அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கிறது.