ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் பிரபல கவர்ச்சி நடிகையும், சர்ச்சை நாயகியுமான ராக்கி சாவந்த், தற்போது ஷீனா போரா கொலை வழக்கை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் ‛ஏக் கஹானி ஜூலி கி' என்ற படத்தில் ஷீனாவின் அம்மாவான இந்திராணி ரோலில் நடித்துள்ளார். இப்படம் அடுத்தவாரம் வெளியாக உள்ளது. இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தன் மார்பகத்தை ஆபரேஷன் மூலம் பெரிதாக்கியுள்ளது கூறியுள்ளார்.
இதுகுறித்து ராக்கி மேலும் கூறியதாவது... ‛‛நான் என்னுடைய மார்பகத்தை பெரிதாக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டுள்ளேன். இதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது. பாலிவுட்டில் இருக்கும் பல பிரபலங்கள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார்கள். அவர்களின் உடலில் இருக்கும் பிளாஸ்டிக்குகளை எல்லாம் ஒன்று சேர்த்தால் மூன்று டிரக் அளவுக்கு சேகரித்து விடலாம். நான் ஆபரேஷன் செய்து கொண்டதை நேர்மையாக ஒப்பு கொண்டேன், மற்றவர்கள் செய்வார்களா.? என்று கூறியுள்ளார்.