‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
குட்டிப் பையன் மாதிரிதான் இருப்பார் அந்த நடிகர், ஆனால், அவருடைய காதல் லீலைகள் மாநிலம் விட்டு மாநிலம் கடந்தும் புகழ் பெற்ற ஒன்று என்பது அந்தந்த மாநில உச்ச நடிகர்களுக்கும் தெரியும். சில வருடங்களுக்கு முன்பு உலக நடிப்புக்கே நாயகனாக இருப்பவரின் மகளுடன் அவர் நெருக்கமாகப் பழகியது ஐதராபாத், மும்பை என மாநிலம் விட்டு மாநிலம் மாறிக் கொண்டேயிருந்தது. ஒரு சந்தர்ப்பத்தில் ஐதராபாத்தில் கையும், களவுமாக சிக்கியவரை அன்பான மிரட்டலுடன் அடக்கி வைத்தார்கள். அதன் பின் ஐதராபாத்தை விட்டு தங்களது இருப்பிடத்தை மும்பைக்கு மாற்றிக் கொண்டார்கள். இப்போதும் அவர்களுக்கிடையேயான அந்த அன்பு அடிக்கடி தொடர்கிறது என்கிறார்கள்.
இருந்தாலும் அந்த குட்டி நடிகர் தற்போது மில்க்கின் மந்திரத்தால் கட்டுண்டு கிடக்கிறார் என்கிறார்கள். அதனால்தான் அவருக்காகவே கணக்கான ஒரு படத்தை தயாரித்திருக்கிறார். அந்தப் படம் பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியதைப் பற்றிக் கூட அவர் கவலைப்படவில்லை. அடுத்து தன்னுடைய நார்த் படத்திலும் நடிக்க வைக்கும் பணிகளில் இறங்கிவிட்டார். இடையில் சில காலம் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற உச்ச நடிகருக்கு இந்த விஷயங்கள் காதுக்கு எட்டியுள்ளன. உடனே அவரும் பஞ்சாயத்தில் இறங்கியிருக்கிறார். சில பல சமரசப் பேச்சுகளுக்குப் பிறகு மருமகன் நடிகரின் தயாரிப்பில் ஒரு படம் நடித்துக் கொடுக்க சம்மதித்திருக்கிறார். ஆனால், ஒரு கண்டிஷனுடன். மருமக நடிகர் தயாரித்து நடிக்கும் நார்த் படத்தில் மில்க் நடிகை நாயகியாக நடிக்கக் கூடாது, அவருடன் இனி எந்த தொடர்பும் கூடாது என்பதுதான் அந்த கண்டிஷன். மருமகனும் அதற்கு சம்மதித்துவிட்டார் என்கிறார்கள். இவ்வளவு நடந்த பிறகும் சிலர் மருமகன் மீதுள்ள அன்பால் தான் அவர் கால்ஷீட் கொடுத்தார் என சொல்லிக் கொண்டு திரிவது எவ்வளவு அப்பாவித்தனமானது.