டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கமல்ஹாசனுக்கு உலக புகழ்பெற்ற செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் திலகம் சிவாஜிக்கு பிறகு கலைத்துறையில் இந்த விருதை பெறுகிறவர் கமல். இதற்காக கமலை திரையுலகமே திரண்டு நேரில் சென்று வாழ்த்தியது. தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் வாழ்த்தினார்கள். தமிழக முதல்வர் வாழ்த்தவில்லை. ஆனால் கேரள முதல்வர் பினராயி விஜயன் கமலுக்கு வாழ்த்து கடிதம் அனுப்பினார். அதில் "இந்திய சினிமாவை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லும் உங்களுக்கு கிடைத்திருக்கும் கவுரவம்" இது என்று எழுதியிருந்தார்.
இந்த கடிதத்திற்கு கமல் பதில் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: செவாலியே விருது கிடைத்த எனக்கு வாழ்த்து தெரிவித்தமைக்கு மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தங்களிடம் இருந்து வாழ்த்து கடிதம் வந்ததை அறிந்த என் நண்பர்கள் பிற மாநில முதல்வர் வாழ்த்து அனுப்பியதற்கு ஆச்சர்யப்பட்டார்கள். நீங்கள் பிற மாநில முதல்வர் அல்ல, எனக்கும் நீங்கள்தான் முதல்வர் என அவர்களிடம் கூறினேன் என்றதோடு, கமல்அந்த கடிதத்தில், நீங்கள் மலையாள சினிமா பார்க்கும் எந்த ஒரு மலையாளியையும் கேட்டுப் பாருங்கள், கமல் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவன் என்று? தன் பாணியில் ஒரு புதிரும் போட்டு குழப்பிவிட்டுள்ளார் கமல்.