'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலா இயக்கிய பிதாமகன் படத்தில் கஞ்சா குடுக்கி என்ற வேடத்தில் அறிமுகமானவர் கஞ்சா கருப்பு. அதன்பிறகு அமீர் இயக்கிய ராம் படத்தில் வாழ வந்தான் என்ற வேடத்தில் நடித்தார். இந்த இரண்டு வேடங்களுமே அவரை பேச வைத்தன. அதனால் தமிழ் சினிமாவில் புதிய காமெடியனாக உரு வெடுத்தார் கஞ்சா கருப்பு. அதோடு சென்னை வளசரவாக்கத்தில் தான் கட்டிய வீட்டிற்கு பாலா-அமீர் இல்லம் என்றும் தனக்கு சினிமாவில் வாழ்க்கை தந்த அந்த இயக்குனர்களின் பெயரையே வைத்தார்.
இந்நிலையில், வேல்முருகன் போர்வெல்ஸ் என்றொரு படத்தை தயாரித்து அதில் கதையின் நாயகனாக நடித்தார் கஞ்சா கருப்பு. ஆனால் அந்த படம் தோல்வியடைந்து அவரது காமெடி மார்க்கெட்டையும் சரித்து விட்டது. இதனால் சில வருடங்களாக தடுமாறி வந்த அவருக்கு சமீபத்தில் வெளியான தர்மதுரை படம் ரீ-என்ட்ரியாக அமைந்துள்ளது. அதையடுத்து தற்போது பல படங்களில் அவர் கமிட்டாகியிருக்கிறார் கஞ்சா கருப்பு.
மேலும், தற்போது சினிமாவில் சில காமெடியன்கள் வளரத் தொடங்கியதுமே ஒரு காமெடி இலாகாவை உருவாக்கி விடுகின்றனர். ஆனால் கஞ்சா கருப்பு சினிமாவில் நடிகராகி 13 ஆண்டுகளாகி விட்டபோதும இப்போதுவரை டைரக்டர்கள் சொல்லும் காமெடி காட்சிகளில்தான் நடித்து வருகிறார். அந்த வகையில் நான் எப்போதுமே டைரக்டர்களின் காமெடியன் என்று சொல்லும் கஞ்சாகருப்பு, சில காமெடி காட்சிகளில் சிறிய திருத்தம் செய்ய வேண்டு மென்றாலும் டைரக்டர்களிடம் ஒப்புதல் பெற்றுதான் தான் நடிப்பதாக சொல்கிறார்.