தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சமீபத்தில் மலையாள நடிகர் ஜெயசூர்யா நடித்த 'பிரேதம்' மற்றும் 'இன்ஸ்பெக்டர் தாவூத் இப்ராஹிம்' என இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியானது.. இதில் ஜெயசூர்யாவின் பேவரைட் இயக்குனரான ரஞ்சித் ஷங்கர் இயக்கத்தில் நடித்த 'பிரேதம்' ஹிட்டானது.. அறிமுக இயக்குனரான ஷாஜித் யாஹியா என்பவரது இயக்கத்தில் நடித்த 'இன்ஸ்பெக்டர் தாவூத் இப்ராஹிம்' சரியான வரவேற்பை பெற தவறியது.. இந்த விவகாரம் தொடர்பாக இயக்குனர் ஷாஜித் யாஹியாவுக்கும் ஜெயசூர்யாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதில் இயக்குனரை அடிக்க ஜெயசூர்யா கையை ஓங்கியதாகவும் ஒரு செய்தி நேற்று முன் தினம் இருந்து காட்டுத்தீபோல பரவியது.
ஆனால் ஒளிப்பதிவாளர் அழகப்பனை இயக்குனர் ஷாஜித் யாஹியா மரியாதைக்குறைவாக நடத்தியதால் தான் ஜெயசூர்யா கோபப்பட்டார் என்றும் அதனால் தான் இயக்குநரை அடிக்க கை ஓங்கினார் என்றும் சொல்லப்படுகிறது.. ஆனால் இந்த செய்தியை முற்றிலும் மறுக்கும் இயக்குனர், “இது யாரோ கட்டிவிட்ட கட்டுக்கதை.. ஒளிப்பதிவாளர் அழகப்பன் நான் மதிக்கும் ஒருவர்.. அதுமட்டுமல்ல நான் எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை அமைதியாகவே அணுகுவேனே தவிர, யாரிடமும் மரியாதைக்குறைவாக நடந்துகொள்ள மாட்டேன்” என விளக்கம் அளித்துள்ளார்.