மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
விஜய் தற்போது நடித்துவரும் ‛விஜய்-60' படத்தின் கதாநாயகிகளாக ஒரே நேரத்தில் மலையாள திரையுலகை சேர்ந்த இருவர் நடிக்கிறார்கள் என்பது புதுமையான விஷயம் தான். இதில் ஒரு ஹீரோயினான கீர்த்தி சுரேஷ், தமிழில் ரஜினி முருகன்' மூலமாக அழுத்தமாக ரசிகர்கள் மனதில் பதிந்துவிட்டார்.. இன்னொருவரான அபர்ணா வினோத் விஜய் படம் மூலமாகத்தான் தமிழுக்கு அறிமுகமே ஆகிறார். இந்தப்படத்தில் நடிப்பதற்காக படப்பிடிப்பு தளத்திலேயே தமிழ் டியூசன் கற்றுக்கொள்கிறாராம் அபர்ணா வினோத்.
தமிழ்ப்படத்தில் நடிக்கும் அனுபவம் எப்படி என அவரிடம் கேட்டதற்கு, விஜய் படத்தில் நான் நடிக்கிறேன் என்கிற பிரமிப்பு இருக்கிறதே தவிர, மற்றபடி தமிழ்ப்படத்தில் நடிக்கிறோம் என்கிற உணர்வே இல்லை என்கிறார் அபர்ணா. பின்னே இந்தப்படத்தில் அவருக்கு தோழியாக நடிப்பது மலையாளத்தை சேர்ந்த கீர்த்தி சுரேஷ்.. அப்பாவாக நடிப்பது மலையாள நடிகரான விஜயராகவன்.. கீர்த்தியின் அம்மாவாக நடிப்பது மலையாள நடிகையான சீமா. இதுநாள் வரை படமாக்கப்பட காட்சிகள் அனைத்திலும் இவர்களுடனேயே நடித்ததால் மலையாள திரையுலகில் இருக்கும் உணர்வுதான் அபர்ணாவுக்கு இருந்ததாம்.
ஆனால் ஒரே ஒரு மனக்குறை. இதுவரை நடித்த காட்சிகளில் விஜய்யுடன் இணைந்து நடிக்கவில்லையாம். இனிமேல் தான் விஜய்க்கும் இவருக்குமான காட்சிகளை எடுக்க இருக்கிறார்களாம். அதனால் விஜய்யுடன் சேர்ந்து நடிக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார் அபர்ணா வினோத்.