'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் படம் எடுக்கப்படுகிறது என்று சொன்னாலே ரசிகர்களுக்குப் பெரும் சந்தேகம் வந்துவிடும். ஏதாவது ஒரு மொழியில் மட்டும் படத்தை உண்மையாக எடுத்துவிட்டு அடுத்த மொழியில் டப்பிங் செய்து வெளியிடுவார்கள். ஆனால், அதை இரு மொழிப் படம் அதாவது 'பை-லிங்குவல்' என ஆணித்தரமாகச் சொல்வார்கள். 'பாகுபலி' படம் கூட இரு மொழிப் படம் என்றுதான் சொன்னார்கள். ஆனால், பாடல் காட்சிகளிலும் பல காட்சிகளிலும் தெலுங்கு உதட்டசைவுதான் இருந்தது. இருந்தாலும் மற்ற பிரமிப்புகளில் ரசிகர்கள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் உண்மையிலேயே இரு மொழிப் படம்தான் என சத்தியம் செய்யாத குறையாகச் சொல்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்தப் படம் ஆரம்பமானதும் ஐதராபாத்தில், தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருவதும் ஐதராபாத்தில்தான். சென்னையில் படப்பிடிப்பு நடந்ததாகச் சொன்னார்கள், ஆனால், அப்படி எதுவும் நடந்ததாக எங்கும் தகவல் இல்லை. தற்போதும் படப்பிடிப்பு ஐதராபாத்தில்தான் நடந்து வருகிறது.
இதனால், தமிழ்த் திரைப்படத் தொழில்நுட்பக் கலைஞர்கள் அந்தப் படத்தில் பணி புரியும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் படமாக்கப்படும் தமிழ்ப் படங்களுக்கு மட்டுமே வரி விலக்கு அளிக்க வேண்டும் என தமிழார்வலர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால், அதை தயாரிப்பாளர் சங்கமும், அரசும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. 'ஃபெப்ஸி' ஊழியர்கள் இது குறித்து இன்னும் போராட வேண்டும் என சென்னையைச் சேர்ந்த மூத்த ஃபெப்ஸி உறுப்பினர் ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.