சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
குடிபோதையில் காரை ஓட்டி, போலீஸ் வாகனத்தின் மீது மோதிய வழக்கில், தலைமறைவாக இருந்த நடிகர் அருண் விஜய், இருதினங்களுக்கு பின்னர் இன்று(ஆகஸ்ட் 30ம் தேதி) கைது செய்யப்பட்டார். பின்னர் சொந்த ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.
நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய். பாண்டவர் பூமி, மாஞ்சா வேலு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில், அஜித் நடித்த, என்னை அறிந்தால் படத்தில், வில்லனாக நடித்துள்ளார். இருதினங்களுக்கு முன்னர் நடிகை ராதிகாவின் மகள் ரேயான், கிரிக்கெட் வீரர் மிதுன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் உள்ள நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் நடந்தது. இதில் தனது மனைவி ஆர்த்தியுடன், அருண் விஜய் பங்கேற்றார்.
நிகழ்ச்சியை முடித்து, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை வழியாக, அதிகாலை, 3:00 மணியளவில், பி.எம்.டபுள்யூ சொகுசு காரில், மனைவி ஆர்த்தியுடன், வீட்டுக்கு கிளம்பினார். அப்போது, நுங்கம்பாக்கம் காவல் நிலையம் அருகே தாறுமாறாக ஓடிய கார், அங்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனம் மீது மோதியது. அருண் விஜய், போதையில் தள்ளாடியபடி காரை விட்டு இறங்கினார்; அவருடன் மனைவி ஆர்த்தியும் கீழே இறங்கினார். அருண் விஜய், செம போதையில் இருந்தது தெரியவந்தது. பரிசோதனையில், அவர் குடித்த மதுவின் அளவு, 59 சதவீதமாக இருந்தது. விபத்தில், போலீஸ் வாகனத்தின் பின்பகுதி பலத்த சேதமடைந்தது; அதேபோல், காரின் முன்பக்கமும் சேதமடைந்தது.
இதையடுத்து, வாகன சட்ட பிரிவு, 185; இந்திய சட்ட பிரிவு, 279ன் படி, குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், பொது சொத்திற்கு சேதம் ஏற்படுத்துதல் போன்ற பிரிவுகளின்படி வழக்கு பதிவு செய்து, மாஜிஸ்ட்ரேட் முன் ஆஜராகி, அபராதம் செலுத்தி, காரை எடுத்து செல்லும்படி போலீசார் கூறினர். இதனால், நுங்கம்பாக்கம் சட்டம் - ஒழுங்கு பிரிவில் இருந்து, பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது.
நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் இருந்து, பாண்டி பஜார் காவல் நிலையத்துக்கு, அருண் விஜய்யை போலீசார் அழைத்த போது, தந்தை விஜயகுமாரின் காரில் வருவதாக கூறினார்; போலீசாரும் அனுமதித்தனர். ஆனால், பாண்டி பஜார் காவல் நிலையத்தில், போலீசார்
காத்திருந்தனர்; வெகுநேரமாகியும் நடிகர், பாண்டி பஜார் வரவில்லை. இதையடுத்து அவர் கைதுக்கு பயந்து தலைமறைவானார். அருண் விஜய் மீது ஜாமினில் வரக்கூடிய பிரிவுகளின்படி தான், போலீசார் வழக்கு பதிவு செய்து இருந்தனர். போலீஸ் காவலில் இருந்து தப்பிச் சென்றதால், வழக்கு பிரிவுகளை மாற்றினர்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தலைமறைவாக இருந்த அருண் விஜய் இன்று தென்சென்னை, போக்குவரத்து துணை ஆணையர் அலுவகத்தில் சரண் அடைய வந்தார். விசாரணைக்கு பின்னர் பாண்டிபஜார் புலனாய்வு போலீசார் அருண் விஜய்யை கைது செய்தனர். தொடர்ந்து அருண் விஜய், சென்னை, எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணைக்கு பின்னர் அவர் சொந்த ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.