தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ரஜினி படங்களுக்கு மக்கள் மத்தியில் இந்தளவுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், அவற்றில் முக்கியமான காரணம்... ஒவ்வொரு படங்களுக்கும் இடையில் அவர் எடுத்துக்கொள்ளும் நீண்ட இடைவெளிதான். அந்த இடைவெளிதான் அவரது படங்களுக்கு எதிர்பார்ப்பை எகிற வைத்தன.
ஆனால் தற்போது ரஜினியிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 'எந்திரன்' 2ஆம் பாகத்தின் அறிவிப்புக்குப் பின்னர், கபாலி படம் திடீரென அறிவிக்கப்பட்டது.
அதோடு மளமளவென உருவாகி, மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்துடன் வெளியாகி, வசூல் மழையும் பொழிந்தது. இப்போது 'எந்திரன் 2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஷங்கர் இயக்கிவரும் '2.0' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் தற்போது நடித்து வருகிறார் சூப்பர்ஸ்டார். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் செப்டம்பரில் நிறைவடையும் எனத் தெரிகிறது.
இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வண்ணம் தன்னுடைய 'வுண்டர்பார் ஃபிலிம்ஸ்' நிறுவனம் தயாரிப்பில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தியை வெளியிட்டிருக்கிறார் தனுஷ். இப்படத்தையும் 'கபாலி' பட இயக்குநர் பா.ரஞ்சித்தே இயக்கவிருக்கிறார். இது கபாலி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்று சிலர் கூறி வருகின்றனர். உண்மையில் கபாலி படக்குழுவினர் இணைகிறார்களே தவிர கபாலி படத்தின் இரண்டாம் பாகம் அல்ல என்கிறது பா.ரஞ்சித் தரப்பு.