தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
டோலிவுட்டின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி, தமிழில் சர்ச்சைகளுடன் வெளிவந்து வெற்றி அடைந்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகின்றார். கைதி நம்பர் 150 என பெயரிட்டப்பட்டிருக்கும் இப்படத்தை இயக்குனர் விவி விநாயக் இயக்குகின்றார். சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் லைக்கா புரொடக்ஷனுடன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சிரஞ்சீவியின் சகோதரரும் பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான நாகபாபுவின் மகள் நிஹரிகா சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாகக் கூறப்படுகின்றது. “ஒக்க மனசு” படத்தின் வாயிலாக நாயகியாக அறிமுகமான நிஹரிகாவிற்கு அப்படம் தோல்விப்படமாக அமைந்தது. இந்நிலையில் தனது அடுத்த படம் குறித்த விவாதத்தில் ஈடுபட்டு வந்த நிஹரிகா சிரஞ்சீவியின் 150வது படத்தில் நடிக்க சிரஞ்சீவியிடம் கோரிக்கை விடுத்திருந்தாராம். சிரஞ்சீவியும் நிஹாரிகா சிறப்பு தோற்றத்தில் நடிக்க இயக்குனரிடம் கேட்டு ஏற்பாடு செய்துள்ளாராம்.