நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
சென்னை: அடுத்தாண்டு நடைபெற உள்ள தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் இளம் தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து போட்டியிடுவார்கள் என்று நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் தெரிவித்தார்.
நடிகர் விஷால் தனது 39 பிறந்த நாளை இன்று கொண்டாடினார். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் நடிகர் சங்க நிர்வாகிகள் பலர் அவருக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராக முதல் பிறந்த நாளை கொண்டாடுகிறேன். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
நடிகர் சங்க கட்டிடம் கட்டும் வரை குதிரை போல ஓடிக் கொண்டே இருப்போம். நாங்கள் யாரும் பதவி ஆசைக்காக வரவில்லை. நாங்கள் நடிகர் சங்க கட்டிடம் கட்டும் வரை போராடுவோம். கட்டி முடித்த பின்னர் துணை நடிகர்களின் வாழ்க்கை மிகவும் பிரகாசமாக இருக்கும்.
நடிகர் சங்கத்தில் ஊழல் என்ற பேச்சுக்கே நடிகர் சங்கத்தில் இடமில்லை. நாங்கள் பதவிக்கு வந்து ஒரு வருடம் ஆகப்போகிறது. நடிகர் சங்கத்தில் ஒரு குண்டுசிக்கு கூட சரியாக கணக்கு உள்ளது. நாங்கள் எங்களுக்கு பேனா தேவை என்று நடிகர் சங்கத்தில் இருந்து எடுத்தால் கூட பொருளாளர் கார்த்தி அதற்கு அனுமதிக்கமாட்டார். இங்கே ஊழல் என்ற விஷயத்துக்கு இடமே கிடையாது. ஊழல் குற்றச்சாட்டு கூறுபவர்கள் என்ன ஆதாரம் இருக்கிறதோ அதைக் கொண்டு வரட்டும்.
ஜனவரி 14, 2018-ம் தேதிக்குள் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்க தீர்மானித்திருக்கிறோம். கட்டிடம் கட்டிய அடுத்த முகூர்த்தத்தில் எனக்கு அக்கட்டிடத்தில் திருமணம் நடைபெறும்.
தயாரிப்பாளர் சங்கம் தொடர்பாக பல கேள்விகள் கேட்டு வருகிறோம். எந்தவொரு பதிலுமே இல்லை. ஆகையால், அடுத்த தேர்தலில் தயாரிப்பாளர்களாக இருக்கும் நடிகர்கள், இயக்குநர்கள் ஆகியோரை ஒன்று திரட்டி தேர்தலில் நிற்க முடிவு செய்திருக்கிறோம்.
நான் அரசியலுக்கு வருவேன் என்று யாரும் எண்ண வேண்டாம். அரசியலுக்கு வரும் எண்ணமெல்லாம் கிடையாது.