இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
அந்தக் காலத்திய நட்சத்திர அம்மா நடிகை கண்ணாம்பா. மனோகரா படத்தில் பொறுத்தது போதும் மனோகரா பொங்கி எழு என்ற அவரது வீரக்குரல் இப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. பாகவதர், சின்னப்பா காலத்தில் ஹீரோயினாக நடித்தவர். எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் அவர்களுக்கு அம்மாவாக நடித்தார்.
கண்ணாம்பா தமிழில் தாலி பாக்கியம் என்ற படத்தை தயாரித்தார். இதில் எம்.ஜி.ஆர், சரோஜாதேவி, எம்.என்.ராஜம் நடித்தனர். கண்ணாம்பாவின் கணவர் கே.பி.நாகபூஷணம் இயக்கினார். இதன் வெளிப்புற படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் நடந்து வந்தது. பாடல்காட்சிகள் படமாக்கப்பட்டது. நூற்றுக் கணக்கான சினிமா தொழிலாளர்கள், நடன கலைஞர்கள் பங்கேற்று பணியாற்றினார். மாலையில் படப்பிடிப்பு முடிந்ததும் சம்பளம் கொடுப்பதற்காக கண்ணாம்பா பணப் பெட்டியை தேடியபோது அதை யாரோ திருடிச் சென்றுவிட்டிருந்தார். அதில் லட்சக்கணக்கில் பணம் இருந்தது. தொழிலாளர்களுக்கு எப்படி சம்பளம் கொடுப்பது. படப்பிடிப்பை எப்படி தொடர்ந்து நடத்துவது அதிர்ந்து போய் நின்றார் கண்ணாம்பா.
விஷயத்தை கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர் கண்ணாம்பாவுக்கு ஆறுதல் சொன்னதோடு பணத்துக்கு நான் ஏற்பாடு செய்கிறேன் என்று கூறிவிட்டு சென்னை சத்யா ஸ்டூடியோவுக்கு போன் செய்தார். அதன் நிர்வாகி குஞ்சப்னிடம் 5 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு காரில் கர்நாடகா வந்து சேரும்படி கூறினர். அதன்படியே குஞ்சப்பனும் வந்தார் படப்பிடிப்பும் தடையின்றி நடந்தது. 5 லட்சம் என்பது இன்றைய மதிப்பில் 5 கோடி.
இதேபோல கண்ணாம்பா கடைசி காலத்தில் கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்தார். தி.நகரில் உள்ள தனது வீட்டை விற்க முயன்றார். கண்ணாம்பாவின் அவசரத்தை புரிந்து கொண்டவர்கள் குறைவான விலைக்கு கேட்டார்கள். இதனை அறிந்த எம்.ஜி.ஆர் அந்த வீட்டை நல்ல விலைக்கு வாங்கிக் கொண்டதோடு "நீங்கள் வீட்டை காலி செய்ய வேண்டாம். உங்கள் ஆயுட்காலம் முழுமைக்கும் அந்த வீட்டிலேயே இருங்கள்" என்று கூறிவிட்டார். அதன்படி கண்ணாம்பா மறைந்த பிறகே எம்.ஜி.ஆர் அந்த வீட்டுக்குச் சென்றார். அதுதான் இப்போது எம்.ஜி.ஆர் அருங்காட்சியகமாக செயல்படுகிறது.