நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
எதையாவது புதுமையாக செய்தால்தான் சிறு படங்கள் மக்களை சென்று சேரும் என்பதுதான் இன்றைய நிலை. அதற்காக புதிய இயக்குனர்கள் புதிது புதிதாக எதையாவது செய்யத் துடிக்கிறார்கள். அந்த வரிசையில் குறும்பட இயக்குனர் ஏ.ஆர்.எஸ். சுந்தர் ஒரு படத்தை ஒரே அறைக்குள் படமாக்கி இருக்கிறார். படத்தின் பெயர் தாயம். சந்தோஷ் பிரதாப், அயிரா அகர்வால் என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். சதீஷ் இசை அமைத்துள்ளார், பாஹி ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் பற்றி இயக்குனர் ஏ.ஆர்.எஸ் கூறியதாவது:
ஒரு அறைக்குள் நடக்கும் சம்பங்களை சொல்லும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். மொத்தமே 8 கேரக்டர்கள்தான். ஒரு அறைக்குள் அந்த 8 பேரும் வெவ்வேறு காரணங்களுக்காக வந்து போகிற போது நடக்கும் சம்பங்கள்தான் கதை. ஒரே அறைக்குள் நடக்கும் கதை என்பதால் போரடித்துவிடக்கூடாது என்பதற்காக திரைக்கதையில் நிறைய கவனம் செலுத்தியிருக்கிறேன். இது புதிய முயற்சி என்பதை விட கதைக்கான களம் அப்படி என்றுதான் சொல்ல வேண்டும். பின்னணி இசையும், ஒளிப்பதிவும் துணை செய்திருக்கிறது" என்கிறார் சுந்தர்.