கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
எதையாவது புதுமையாக செய்தால்தான் சிறு படங்கள் மக்களை சென்று சேரும் என்பதுதான் இன்றைய நிலை. அதற்காக புதிய இயக்குனர்கள் புதிது புதிதாக எதையாவது செய்யத் துடிக்கிறார்கள். அந்த வரிசையில் குறும்பட இயக்குனர் ஏ.ஆர்.எஸ். சுந்தர் ஒரு படத்தை ஒரே அறைக்குள் படமாக்கி இருக்கிறார். படத்தின் பெயர் தாயம். சந்தோஷ் பிரதாப், அயிரா அகர்வால் என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். சதீஷ் இசை அமைத்துள்ளார், பாஹி ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் பற்றி இயக்குனர் ஏ.ஆர்.எஸ் கூறியதாவது:
ஒரு அறைக்குள் நடக்கும் சம்பங்களை சொல்லும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். மொத்தமே 8 கேரக்டர்கள்தான். ஒரு அறைக்குள் அந்த 8 பேரும் வெவ்வேறு காரணங்களுக்காக வந்து போகிற போது நடக்கும் சம்பங்கள்தான் கதை. ஒரே அறைக்குள் நடக்கும் கதை என்பதால் போரடித்துவிடக்கூடாது என்பதற்காக திரைக்கதையில் நிறைய கவனம் செலுத்தியிருக்கிறேன். இது புதிய முயற்சி என்பதை விட கதைக்கான களம் அப்படி என்றுதான் சொல்ல வேண்டும். பின்னணி இசையும், ஒளிப்பதிவும் துணை செய்திருக்கிறது" என்கிறார் சுந்தர்.