பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
தமிழ் சினிமாவால் புறக்கணிக்கப்பட்டு, தெலுங்கில் வெற்றி பெற்ற நடிகைகளில் சமந்தா, அனுஷ்கா முக்கியமானவர்கள். அந்த வரிசையில் வந்தவர் ரகுல் ப்ரீத்தி சிங். தமிழில் ஆர்யா தம்பி சத்யாவுக்கு ஜோடியாக புத்தகம் படத்தில் நடித்தார். அதன் பிறகு தடையற தாக்க, என்னமோ ஏதோ படங்களில் நடித்தார். எந்த படமும் சரியாக ஓடவில்லை. அதனால் ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்தப்பட்டு தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு அவர் நடித்த படங்கள் வெற்றியடைய முன்னணி நடிகை ஆனார்.
இந்த நிலையில் ரகுல் ப்ரீத் சிங் மீண்டும் தமிழுக்கு வருகிறார். மிஷ்கின் இயக்கும் துப்பறிவாளன் படத்தில் விஷால் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். மிஷ்கின் கமலஹாசனுக்காக எழுதிய கதையில் விஷால் நடிக்கிறார். அவரது உயரத்துக்கேற்ற நடிகை வேண்டும் என்ற தேடியதில் அனுஷ்கா தற்போது பிசியாக இருப்பதால் ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் செப்டம்பர் 14ந் தேதி முதல் தொடங்குகிறது. "தமிழில் நிறைய வாய்ப்புகள் வந்தும் நடிக்கவில்லை. தெலுங்கு படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்ததால் தேதி ஒதுக்கி கொடுக்க முடியவில்லை. தெலுங்கில் முக்கிய இடத்துக்கு வந்து விட்டதால் அதற்கு ஏற்ற மாதிரியான படங்களில் நடிக்க காத்திருந்தேன். அந்த வாய்ப்பு இப்போது அமைந்திருக்கிறது" என்கிறார் ரகுல் ப்ரீத் சிங்.