விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
பிரபல தெலுங்கு நடிகரும் முன்னாள் ஆந்திர முதல்வருமான என்.டி.ராமா ராவ்வின் மகன் பாலகிருஷ்ணா தற்போது டோலிவுட்டில் முன்னணி நடிகராகவும் அரசியல் பிரமுகராகவும் உயர்ந்துள்ளார். தனது 14வது வயதில் தந்தை என்.டி.ஆரின் இயக்கத்தில் தாத்தம்மா கலா எனும் படத்தின் வாயிலாக வெள்ளித்திரைக்கு அறிமுகமான பாலகிருஷ்ணா அதன் பின்னர் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
பாலகிருஷ்ணா தற்போது கௌதமிபுத்ர சாதர்கனி எனும் தனது 100வது திரைப்படத்தில் நடித்து வருகின்றார். சரித்திர திரைப்படமான இப்படத்தை இயக்குனர் க்ரிஷ் இயக்குகின்றார். நடிகை ஸ்ரேயா பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக நடிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகையும் அரசியல் பிரபலருமான நடிகை ஹேமமாலினி முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். திரை உலகில் 42 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் பாலகிருஷ்ணாவிற்கு திரை உலக நண்பர்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.