பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் காதல் என தமிழ், தெலுங்கு திரையுலகத்தினர் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். ஆனால், சம்பந்தப்பட்ட இருவரும் அதைப் பற்றி இதுவரை வாய் திறக்கவில்லை. இருந்தாலும் இருவரும் ஒன்றாக ஜோடி சேர்ந்து சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஹைதராபாத்தில் இருவரையும் ஜோடியாகப் பார்த்ததாகப் பலர் சொல்லியிருக்கிறார்கள். அதைப் பற்றியெல்லாம் இந்தக் காதல் புறாக்கள் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் இருக்கிறார்கள்.
இதனிடையே சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த ஒரு திருமண விழாவிற்கு சமந்தா, நாக சைதன்யா இருவரும் ஒன்றாக ஜோடி சேர்ந்து, கை கோர்த்துக் கொண்டு வந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஒரு பக்கம் எதுவும் சொல்லாமல் இன்னொரு பக்கம் ஜோடியாக வருகிறார்களே எனப் பலரும் பேசிக் கொண்டார்களாம். அந்தத் திருமணத்திற்கு சமந்தா, நாக சைதன்யா குடும்பத்தினர் அனைவருடனும் வந்ததுதான் அதற்குக் காரணம்.
அனேகமாக, அடுத்த ஆண்டு இருவரது திருமணமும் நடக்கும் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போதைக்கு தெலுங்கில் எந்தப் படத்திலும் நடிக்க வேண்டாமென நாக சைதன்யா தரப்பில் சமந்தாவிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாம். அதனால்தான் தமிழில் மட்டும் சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார் என்கிறார்கள். அடுத்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இருவரது திருமணமும் நடைபெறுவது உறுதி என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.