பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கபாலி டைரக்டர் ரஞ்சித் இயக்கிய முதல் படமான அட்டகத்தியில் அறிமுகமானவர் பெங்களூர் நடிகை நந்திதா. முதல் படமே ஹிட் அடித்ததால் தமிழில் பல படங்களில் நடித்து வந்த அவர் தற்போது மீண்டும் தனது முதல் பட நாயகனான தினேசுடன் உள்குத்து படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நாகர்கோயிலில் உள்ள முட்டம் கடற்கரை பகுதியை மையக்கருவாகக் கொண்ட கதையில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நந்திதா மீனவ ஏரியா பெண்ணாக நடித் துள்ளார்.
அவரைத் தொடர்ந்து இப்போது அமலாபாலும் வடசென்னை படத்துக்காக மீனவ பெண்ணாக நடித்து வருகிறார். தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் இந்த படம் மூன்று பாகங்களாக உருவாகிறது. இந்த மூன்று பாகங்களிலுமே அமலாபால்தான் நடிக்கிறார். மேலும், இந்த படத்துக்காக படம் முழுக்க மேக்கப்பே போடாமல் நடிக்கும் அமலாபால், ராயபுரம் மீனவ பெண்ணாக முழுமையாக தன்னை மாற்றிக்கொண்டு நடிக்கிறாராம். ஏற்கனவே அம்மா கணக்கு படத்தில் தத்ரூபமாக நடித்த அமலாபால் இந்த படத்தில் அதை விட பன்மடங்கு சிறப்பான நடிப்பை அதாவது, ராயபுரம் ஏரியா மீனவ பெண்களின் மேனரிஸத்தை உள்வாங்கி நடித்து வருகிறாராம்.