‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
மலையாள நடிகர் தான் என்றாலும் தமிழ்சினிமா தனக்கு அளித்த கௌரவத்தை மனதில் கொண்டு தனது மகன் காளிதாஸை தமிழில் அறிமுகப்படுத்தும் ஆசையில் இருந்த ஜெயராம் பாலாஜி தரணீதரனின் டைரக்சனில் 'ஒரு பக்க கதை'யில் மகனை நடிக்க வைத்தார். சில காரணங்களால் அந்தப்படம் வெளியாகாமல் இருக்க, அடுத்ததாக பிரபுவுடன் சேர்த்து 'மீன் குழம்பும் மண்பானையும்' என்கிற படத்தில் நடிக்க வைத்தார். இந்தப்படமும் ஆடியோ ரிலீஸ் முடிந்த நிலையில் ரிலீஸாக தாமதமாகி வருகிறது.
இந்த நிலையில், சரி.. மலையாளத்திலாவது தனது மகனின் அறிமுக வேலைகளில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ள ஜெயராம், மலையாளத்தில் காளிதாஸ் நடிக்கும் முதல்படமே குறிதப்பாமல் வெற்றிக்கனியை பறிக்கவேண்டும் என தீர்மானித்துவிட்டார். அதற்காக அவர் தேர்ந்தெடுத்தது இயக்குனர் அப்ரிட் ஷைனைத்தான்.. யார் இந்த அப்ரிட் ஷைன் என்கிறீர்களா..? நிவின்பாலியை வைத்து '1983' மற்றும் 'ஆக்சன் ஹீரோ பிஜூ' என தொடர்ந்து இரண்டுமுறை 100 நாள் படங்களை கொடுத்தவர்.. தனது ஹாட்ரிக் சாதனைக்காக துடிப்புடன் தயாராகி வரும் அப்ரிட் ஷைன் படத்தில் காளிதாஸ் அறிமுகமாவது வெற்றிக்கான நூறு சதவீத உத்தரவாதம் என நம்புகிறாராம் ஜெயராம்.