தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த வருடம் பாலிவுட்டில் அக்சய் நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் தான் 'பேபி'. இந்திய உளவாளிகளை மையப்படுத்தி இதுநாள்வரை உருவாகியிருந்த சிறந்த படங்களில் இதுவும் ஒன்று என பலராலும் பாராட்டப்பட்டது. நீரஜ் பாண்டே இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தின் இரண்டாம் பாகமாக இதன் தொடர் பாகத்தை உருவாக்குவதற்கு முன்பாக, இதன் ப்ரீக்வல் எனப்படும் முன்கதையைத்தான் இரண்டாம் பாகமாக உருவாக்க முடிவு செய்துள்ளார்களாம்.
இதன் முதல் பாகத்தில் நடித்திருந்த ராணா டகுபதி இந்த ப்ரீக்வலில் இடம்பெறவில்லையாம். அதே சமயம் முதல்பாகத்தில் இடம் பெற்ற டாப்சி இரண்டாம் பாகத்திலும் இடம் பெறுகிறாராம். புதிய அம்சமாக இந்த இரண்டாம் பாகத்தில் மலையாள நடிகர் பிருத்விராஜும் மிக முக்கியமான கேரக்டரில் நடிக்க இருக்கிறார் என ஒரு தகவல் கசிந்துள்ளது. அய்யா, ஔரங்கசீப் ஆகிய படங்களை தொடர்ந்து பிருத்விராஜ் பாலிவுட்டில் நடிக்கும் மூன்றாவது படமாக இது இருக்கும். அதுமட்டுமல்ல இந்த இரண்டாம் பாகத்தை நீரஜ் பாண்டே தயாரிப்பதோடு நின்றுகொள்ள, வேறு ஒருவர் படத்தை இயக்கவுள்ளாராம்.