ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வழக்கமாக கேரளாவில் முன்னணி நடிகர்களுக்கு இணையாக விஜய் படத்திற்கு வரவேற்பு இருக்கும். காரணம் மோகன்லால், மம்முட்டி, திலீப், பிருத்விராஜ் என அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் விஜய் படங்களை பார்க்கும் பட்டியலில் இருக்கிறார்கள். அதனாலேயே கடந்தமுறை கலைப்புலி தாணு தயாரிப்பில் விஜய் நடித்த 'தெறி' படத்தின் மலையாள உரிமையை மலையாள நடிகர் விஜய்பாபு தனது ப்ரைடே பிலிம் ஹவுஸ் நிறுவனம் மூலம் 5.6 கோடி ரூபாய் கொடுத்து கைப்பற்றினார். அதில் ஓரளவு லாபமும் பார்த்தார்.
இந்தமுறையும் விஜய்-60' படத்தை கைப்பற்றலாமா என விஜய்பாபு யோசனையல் இருக்க ஐ.எப்.ஏ.ஆர் இன்டர்நேஷனல் என்கிற நிறுவனம் இந்தப்படத்தின் உரிமையை கைப்பற்றியுள்ளதோடு, அதை தனது முகநூல் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்துவிட்டது. இந்தமுறை விஜய் படத்தின் வியாபாரம் 6.25 கோடி ரூபாய்க்கு முடிந்ததாக சொல்லப்படுகிறது. பரதன் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில் கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத் என இரண்டு நாயகிகள் நடித்துள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் முடிவடையும் என்றும் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.