ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சினிமாவில் நடிப்பதற்கு முகத்தின் அழகு மிகவும் முக்கியம் என்று இருந்த காலகட்டத்தில் அம்மை தழும்பு முகத்துடன் சினிமாவில் அறிமுகமாகி பல சாதனைகளை படைத்தவர் நாகேஷ். சிறு வயதில் தொடர்ச்சியாக மூன்று முறை அம்மை நோய் தாக்கியதில் அவர் முகம் அம்மை தழும்பு முகமானது. ஒரு முறை அவரிடம் அம்மை தழும்பு முகம் பற்றி கேட்டபோது அவர் சொன்ன பதில் கல்வெட்டுகளில் பதிக்க வேண்டிய நம்பிக்கை வாசகங்கள்.
"உங்க வீட்டுல ஆட்டுக்கல் இருக்கும் பார்த்திருக்கீங்களா? அதுல இட்லி, தோசைக்கு மாவு அரைச்சு பார்த்திருக்கீங்களா? 6 மாசம் அல்லது ஒரு வருஷத்துக்கு ஒரு முறை ஆட்டுக்கல்லை கொத்து வைப்பாங்க. அது எதுக்கு தெரியுமா? அப்படி கொத்தி வைத்தாத்தான் மாவு நல்லா அரைபடும். இட்லியும் ருசியாக இருக்கும். என் முகமும் அந்த ஆட்டுக்கல்லை போலத்தான். ஆண்டவன் அம்மை என்கிற உளியை வைத்து முகம் முழுக்க நல்லா கொத்தி எடுத்துட்டான். அதனாலதான் எனக்கு நடிப்புங்கற இட்லி நல்லா வருது. இது ஆண்டவன் எனக்கு கொடுத்த வரம்" என்றார்.