இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் 2.ஓ படத்தை தயாரிக்கிறது லைக்கா நிறுவனம். இது எந்திரன் இரண்டாம் பாகம். எமி ஹீரோயின், அக்ஷய்குமார் வில்லன். ஷங்கர் இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். தற்போது 2.ஓவின் படப்பிடிப்புகள் 50 சதவிகிதம் முடிந்துள்ளது. 2017ம் ஆண்டு தமிழ் புத்தாண்டில் படம் வெளிவரலாம் என்று தெரிகிறது.
இந்த நிலையில் லைக்கா நிறுவனம் இப்போதே 2.ஓவின் புரமோசன்களை தொடங்கிவிட்டது. லைக்கா நிறுவனம் தற்போது நடந்து வரும் டிஎன்பில் கிரிக்கெட் போட்டியில் கோவை அணியை வாங்கி உள்ளது. இந்த அணி விளையாடும் போட்டியை பார்க்கும் ரசிகர்கள ஸ்டேடியத்தில் தங்களை செல்பி எடுத்து அதனை லைக்கா நிறுவனத்தின் டுவிட்டர், பேஸ்புக் மற்றும் இணைய தள பக்கத்திற்கு அனுப்ப வேண்டும். சிறந்த முறையில் செல்பி எடுத்த ரசிகர்கள் பிரமாண்டமாக நடக்க இருக்கும் 2.ஓ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்திருக்கிறது.