ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 60வது படத்தின் படப்பிடிப்பு உள்நாடு-வெளிநாடு என பலகட்ட படப்பிடிப்புகள் நடந்து வந்தது. அதன்காரணமாக காதல், ஆக்சன், பாடல் சம்பந்தப்பட்ட பெரும்பாலான காட்சிகள் படமாக்கப் பட்டு விட்டது. ஆனால் காமெடி போர்ஷனை மட்டும் இன்னும் முழுமையாக படமாக்கவில்லையாம். அதனால் அந்த காட்சிகளை விஜய், மொட்ட ராஜேந்திரன், சதீஷ் ஆகியோரை வைத்து பொள்ளாச்சியில் ஒரு வாரம் படமாக்க திட்டமிட்டு நேற்று அங்கு படப்பிடிப்பை தொடங்கினார் டைரக்டர் பரதன்.
பொள்ளாச்சியில் உள்ள போக்குவரத்து மிகுந்த ஒரு சாலையில் படக்குழு முகாமிட்டதை அடுத்து விஜய் படப்பிடிப்பு நடக்கிறது என்கிற சேதி காட்டுத்தீயாய் பரவ, பொள்ளாச்சி மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் ஏராளமான ரசிகர்கள் படப்பிடிப்பு நடந்த ஏரியாவை முற்றுகையிட பெருங்கூட்டம் திரண்டு விட்டதாம். அதையடுத்து ஷாட் ரெடியானபோது கேரவனை விட்டு வெளியே வந்து எட்டிப்பார்த்த விஜய், அந்த கூட்டத்தைக்கண்டு ஷாக்காகி விட்டாராம். அதோடு, இவ்வளவு கூட்டத்திற்கு நடுவே என்னால் நடிக்க முடியாது என்று சொல்லி மீண்டும் கேரவனுக்குள்ளேயே சென்று விட்டாராம்.
அதோடு, டைரக்டர் பரதனை அழைத்து, இனிமேல் பொதுஇடங்களில் படப்பிடிப்பு வேண்டாம். இந்த காட்சிகளை சென்னையில் செட் போட்டு படமாக்கிக்கொள்ளலாம் என்று சொல்லி, சிறிது நேரத்தில் சென்னை திரும்பி விட்டாராம் விஜய். அவரைத் தொடர்ந்து அப்படக்குழுவினரும் உடனடியாக சென்னை திரும்பி விட்டனர். நிறுத்தப்பட்ட இந்த படப்பிடிப்பு அடுத்த மாதம் 2-ந்தேதி சென்னையில் நடக்கிறதாம்.