துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பிரமாண்ட படமான பாகுபலி. அதை யடுத்து மீண்டும் முதல் பாகத்தில் நடித்த நடிகர் நடிகைகளை வைத்து பாகுபலி-2 படவேலைகள் கடந்த பல மாதங்களாக ஐதராபாத்தில் செட் போட்டு படமாக்கப்பட்டு வந்தது. தற்போது க்ளைமாக்ஸை நெருங்கி விட்டார் ராஜமவுலி. இதற்கடுத்து அனிமேஷன் வேலைகள் நடைபெறுகிறது.
இந்த நிலையில், பாகுபலி-2 படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்து வருவதால், எந்த வகையிலும் ரசிகர்களை ஏமாற்றி விடக்கூடாது என்று கவனமாக செயல்படுகிறாராம் ராஜமவுலி. அதன்காரணமாக, அப்படத்திற்கு முதலில் ஒரேயொரு க்ளைமாக்ஸை மட்டுமே ரெடி பண்ணி வைத்திருந்தவர், இப்போது நான்கு விதமான க்ளைமாக்ஸ் காட்சிகளை ரெடி பண்ணி அதிலிருந்து இரண்டை தேர்வு செய்து அவற்றை படமாக்கி வருகிறாராம்.
அந்த இரண்டு க்ளைமாக்ஸையும் படமாக்கி, அதில் எது சிறப்பாக உள்ளதோ அதை படத்தில் இணைத்து வெளியிடப்போகிறாராம். ஒருவேளை படம் வெளியான பிறகு அந்த க்ளைமாக்ஸ்க்கு ரசிகர்கள்தரப்பில் இருந்து ஏதேனும் அதிருப்தி நிலவினால். கைவசம் இருக்கும் இன்னொரு க்ளைமாக்ஸை படத்தில் இணைக்கும் யோசனையும் உள்ளதாம். இப்படி இரண்டுவிதமான க்ளைமாக்ஸை எடுப்பதால் பாகுபலி-2 படத்தின் பட்ஜெட் கணிசமான அளவு உயர்ந்து விட்டதாம்.