விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
ஆகஸ்ட் மாதத்தின் கடைசி வெள்ளிக் கிழமையான நேற்று “54321, அந்தக் குயில் நீதானா, கவுண்டமணியின் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, மீண்டும் ஒரு காதல் கதை, வென்று வருவான்” ஆகிய ஐந்து படங்கள் வெளியாகின. இதில் எந்தப் படமுமே முன்னணி நடிகர்களோ அல்லது முன்னணி இயக்குனர்களோ இயக்கிய படங்கள் அல்ல. எந்தப் படமும் பெரிய பட்ஜெட் படமும் அல்ல. இருந்தாலும் மற்ற புதுமுக நடிகர்களின் படங்களுக்கு மத்தியில் கவுண்டமணி மட்டுமே கலக்கும் நாயகனாக இருக்கிறார்.
'49 ஓ' படத்திற்குப் பிறகு கவுண்டமணி நாயகனாக நடித்து வெளிவந்துள்ள 'கவுண்டமணியின் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது' படம்தான் மற்ற படங்களை விட பார்க்கவும், ரசிக்கவும் தகுதியான ஒரே படமாக இருக்கிறது. போகிற போக்கில் தன்னுடைய டைமிங் வசனத்தால் காட்சிக்குக் காட்சி சிரிக்க வைக்கிறார் கவுண்டமணி. சினிமா, அரசியல், ஃபேஸ்புக் என இன்றைய டிரென்டிங்கில் உள்ள அனைத்து விஷயங்களையும் அவருடைய பாணியில் கலாய்த்துத் தள்ளியிருக்கிறார்.
இப்படி ஒரு படம் வெளிவந்துள்ளது என்று போஸ்டரைப் பார்த்தால்தான் ஊரில் உள்ள ரசிகர்கள் கூடத் தெரிந்து கொள்வார்கள். படத்திற்கு முன்னரே மற்ற முன்னணி நடிகர்களின் படங்களைப் போல சிறப்பான ஒரு பிரமோஷன் செய்திருந்தால் மிகப் பெரிய வெற்றிப்படமாக இந்தப் படம் அமைந்திருக்க வாய்ப்புண்டு.
சுமார் 160 தியேட்டர்களில் வெளியாகியுள்ள இந்தப் படம் 'மவுத் டாக்' எனப்படும் வாய்வழிப் பேச்சால் மட்டுமே ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்கும் நிலையில் உள்ளது. இந்த வயதிலும் கவுண்டமணி தான் யார் என்பதை இந்தப் படத்தின் மூலம் மீண்டும் நிரூபித்திருக்கிறார்.