தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
உலகில் உள்ள எந்த நடிகைக்கும் இல்லாத சிறப்பு டி.ஏ.மதுரத்திற்கு உண்டு. ஆம் அவர் தன் கணவர் என்.எஸ்.கிருஷ்ணனுடன் இணைந்து 100 படங்களுக்கு மேல் ஜோடியாகவும், மனைவியாகவும் நடித்துள்ளார். உலகில் எந்த நடிகைக்கும் கிடைத்திராத அபூர்வ வாய்ப்பு இது.
திருவரங்கத்தைச் சேர்ந்த மதுரம் திருமண வீடுகளில் நலுங்கு பாடல்கள் பாடி அந்த ஏரியாவில் புகழ்பெற்றார். சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை வந்து ஏவிஎம் நிறுவனம் தயாரித்த ரத்னாவளி படத்தில் அறிமுகமானார். ஆனால் அதற்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் இல்லை.
வசந்தசேனா என்ற படத்தில் நடிப்பதற்காக புனேவுக்கு ரெயிலில் சென்றபோது அந்த படத்தின் புரொடக்ஷன் மானேஜரான என்.எஸ்.கிருஷ்ணனின் நட்பு கிடைத்தது. என்.எஸ்.கே, மதுரத்தின் வளர்ச்சிக்கு உதவி செய்யவே... நட்பு காதலானது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 80களில் கவுண்டமணி செந்தில் இல்லாமல் படம் இல்லை. 2000ம்களில் வடிவேலு இல்லாமல் படம் இல்லை. அதுபோல அந்தக் காலத்தில் என்.எஸ்.கே - டி.ஏ.மதுரம் இல்லாத படம் இல்லை. தனி டிராக் காமெடி என்ற டிரண்டை உருவாக்கி இருவரும் நடித்தனர். அப்படி நடித்த படங்கள் 100 படங்களுக்கு மேல் என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது. இது ஒரு உலக சாதனை. இதனை ஆதாரங்களோடு யாராவது எடுத்துச் சென்றால் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறச் செய்யலாம்.