மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கடந்த நான்கு வருடங்களாக வெளியாகி வரும் பிருத்விராஜின் படங்களை கவனித்து பார்த்தால் அதில் பெண்களை திட்டுவது போன்றோ, அல்லது மோசமான வசனங்களால் இழிவுபடுத்துவது போன்றோ காட்சிகள் இடம்பெறவே இல்லை என்பதை கண்டுபிடிக்கலாம்... அதற்கு காரணமும் இருக்கிறது என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார் பிருத்விராஜ்.. தான் நடிகனாக மாறி, முன்னணி நாயகனாக வளர்ந்த காலகட்டத்தில் பெண்களுக்கு எதிராக பஞ்ச் வசனங்களை பேசி நடித்ததை இப்போது நினைத்தால் சங்கடமாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார் பிருத்விராஜ்.
குறிப்பாக ரப் அன்ட் டப் போலீஸ் அதிகாரியாக சில வருடங்களுக்கு முன் தான் நடித்த 'வர்க்கம்' படத்தில் பெண்களை ரொம்பவும் மட்டமான வார்த்தைகளால் திட்டுவதுபோல நடித்திருந்ததை நினைவுபடுத்தும் பிருத்விராஜ், தனது வாழ்விலும் ஒரு பெண் நுழைந்தபின்தான், நிஜத்தில் மட்டுமல்ல, தனது படங்களிலும் கூட அவர்களை மோசமாக சித்திரிக்கும் காட்சிகளில் நடிக்க கூடாது என்கிற முடிவுக்கு வந்தாராம். இதுவரையிலான மலையாள சினிமாவில் இடம்பெற்ற மிகவும் தைரியமான பெண் கதாபாத்திரமாக மோகன்லாலின் 'தேவாசுரம்' படத்தில் ரேவதி ஏற்று நடித்த 'பானுமதி' கேரக்டரை குறிப்பிட்டு தன்னை மிகவும் கவர்ந்த பெண் அவள் தான் என பெருமிதமாக கூறியுள்ளார் பிருத்விராஜ்.