வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
மிருகம் படத்தில் அறிமுகமான தெலுங்கு நடிகர் ஆதிக்கு தமிழில் இன்னும் நேரம் வொர்க் அவுட்டாகவில்லை. பல படங்களில் நடித்தும் அவரால் முதல்வரிசைக்கு வர முடியவில்லை. கடைசியாய் அவர் நடித்த படம் 'யாகவராயினும் நா காக்கா'. இந்தப் படத்தை அவரது அப்பா தயாரித்தார். ஆதியின் சகோதரர் இயக்கினார். 'யாகவராயினும் நா காக்கா' படமும் தோல்வியடைந்தது.
இந்நிலையில், 'யாகவராயினும் நா காக்கா' படத்தைத் தொடர்ந்து ஆதி, நிக்கி கல்ராணி மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் ஏ.ஆர்.கே. சரவணன் என்பவர் இயக்குகிறார். இப்படத்திற்கு 'மரகத நாணயம்' என்று பெயரிட்டுள்ளனர்.
ஆடுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் படமாம் இது. எனவே, இந்த படத்திற்காக ஆடுகளை மையப்படுத்தி ஒரு பாடலை எழுதி பாடியிருக்கிறார் 'நெருப்புடா...' பாடல் புகழ அருண்ராஜா காமராஜ் . ஜமுனா பாரி, பீட்டல், பார்பாரி, தெல்லிச்சேரி, பெராரி என எல்லா ரக ஆடுகளின் பெயர்களையும் இப்பாடலில் உள்ளடக்கி எழுதி பாடியுள்ள அருண்ராஜா காமராஜ், இப்பாடலுக்காக ஆடுகளின் குரலை பிரத்தியேகமாக பதிவும் செய்துள்ளார். இப்படத்திற்கு அறிமுக இசை அமைப்பாளர் திபு இசை அமைக்கிறார்.