இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சில வருடங்களுக்கு முன் தமிழ்சினிமாவில் ஃபைட் மாஸ்டராக இருந்தவர் ஜாகுவார் தங்கம். ஒரு கட்டத்தில் இவருக்கு படங்கள் இல்லாமல் போனதால் கில்டு என்ற ஒரு அமைப்பில் நுழைந்து மெல்ல அதன் தலைமைப் பொறுப்பை கைப்பற்றினார். அதன் பிறகு சின்ன பட்ஜெட் படங்களின் விழாக்களுக்கு வர ஆரம்பித்தார். அப்படி வரும்போது ஏடாகூடமா எதையாவது பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
அது சில மீடியாக்கள் செய்தியாக வெளியிட்டதால் ருசி கண்ட ஜாகுவார், தொடர்ந்து எல்லா விழாக்களிலும் இப்படி ஏடாகூடமாக பேச ஆரம்பித்தார். இதன் உச்சகட்டமாக நேற்று நடைபெற்ற ஒரு பட விழாவில், பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் வழக்கம்போல ஆவேசமாக பேசினார்.
அதாவது, திருட்டு விசிடியை ஒழிக்க வந்த ஆபந்தபாந்தவனே நாம்தான் என்று நினைத்துக் கொண்டு, “திருட்டு விசிடி யாராவது பார்த்தீர்கள் என்றாலோ, விற்றீர்களோ என்றாலோ கைகள் உடைக்கப்படும், உங்கள் கடைகள் கொளுத்தப்படும்” என்று வன்முறையாக முழங்கினார்.
திருட்டு விசிடியில் படம் பார்ப்பவர்களின் கைகளை உடைப்பேன் என்றும், கடைகளை கொளுத்துவேன் என்றும் பகிரங்கமாக வன்முறையாக வரம்புமீறி பேசும் ஜாகுவார் தங்கம் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை திரையுலகிலேயே வலுக்க ஆரம்பித்துள்ளது.