‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தமிழ் சினிமாவின் புரட்சி நாயகனாக பல்வேறு புரட்சிகளையும், அதிரடி நடவடிக்கைகளையும் செய்து வருபவர் நடிகர் விஷால். அதற்கு சமீபத்திய உதாரணம் நடிகர் சங்கம் தேர்தல், திருட்டு விசிடி தொடர்பான நடவடிக்கை உள்ளிட்ட பல விஷயங்களையும் சொல்லலாம்.
இந்நிலையில் நடிகர் விஷால் வருகிற ஆகஸ்ட் 29ம் தேதி, தனது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். தனது பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள், ரத்ததானம், என பல உதவிகள் செய்து கொண்டாட இருக்கிறார். பிறந்த நாளுக்கு முந்தைய தினத்தன்றும், பிறந்தநாள் அன்றும் ரசிகர் மன்றங்கள் நடத்தும் பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.
ஆகஸ்ட் 28-ம் தேதி, முதல்வர் தொகுதியான ஆர்கே நகரில், விஷால் நற்பணிமன்ற, சென்னை மாவட்ட மகளிரணி தலைவி மஞ்சுளா ஏற்பாடு செய்துள்ள ரத்ததானம் முகாமில் கலந்துக்கொண்டு முகாமை திறந்து வைக்கிறார் விஷால். தொடர்ந்து நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார்.
காலை 11 மணியளவில் திருவள்ளூரில் மணலி திருமண மண்டபத்தில் கண்ணன், ஏற்பாடு செய்துள்ள நலத்திட்ட உதவி நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். அன்று இரவு 7 மணியளவில் சென்னை மாவட்ட தலைவர் இராபர்ட் தலைமையில், இராயபுரம் பகுதியில் ஏழை எளியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
29-ம் தேதி, முதியோர் இல்லத்திற்கு உணவு வழங்குதல், அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு விஜய் பாணியில் மோதிரம் அணிவித்தல், கோவில்களில் அன்னதானம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் விஷால் பங்கேற்க உள்ளார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விஷால் ரசிகர் மன்ற உறுப்பினர்களுடன், விஷால் ரசிகர் நற்பணி மன்ற தலைவர் ஜெயசீலன், செயலாளர் ஹரி ஆகியோர் உடனிருந்து கவனித்து வருகிறார்கள்.