‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபட்டி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் 'பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு கடந்த இரண்டு வாரங்களாக நடந்து வருகிறது. இதற்காக 4 விதமான கிளைமாக்ஸை ராஜமௌலி படமாக்கியுள்ளார் என டோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல் பாகத்தின் முடிவில் 'பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் ?' என்ற கேள்வியுடன் படம் முடிந்தது. இரண்டாம் பாகத்தில் அதற்கான காரணம் என்ன என்பதைச் சொல்லியாக வேண்டும். முதல் பாகம் முடிந்த போது கூட அதற்கான காரணம் என்ன என்பது இயக்குனர் ராஜமௌலிக்குத் தெரியாதாம்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் படத்தின் கதை ஆசிரியரான விஜயயேந்திர பிரசாத், “அனைவருக்கும் கட்டப்பா பாகுபலியைக் குத்தினார் என்பது தெரியும். அதே சமயம் பாகுபலி உயிருடன் இருந்தாலும் இருக்கலாம்,” எனக் கூறியிருந்தார். அதனால் இரண்டாம் பாகத்தில் பாகுபலி உயிருடன் இருந்தாலும் இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு மொத்தமாக முடிவடைந்ததும் எந்த கிளைமாக்ஸ் கதைக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறதோ அதை படத்தில் சேர்க்கலாம் என ராஜமௌலி முடிவெடுத்திருக்கிறாராம்.