இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான், 50வயதை தாண்டியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார். சல்மான் உடன் பல நடிகைகள் காதல் கிசுகிசுவில் சிக்கினர். தற்போது அவர் ருமேனியாவை சேர்ந்த லூலியா வந்தூர் என்பவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்தவாரம் கூட சல்மான் கானுக்கும், லூலியாவிற்கும் திருமணம் ஆகிவிட்டதாக ருமேனியாவை சேர்ந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டது.
சமீபத்தில் லூலியா அளித்துள்ள பேட்டி ஒன்றில் சல்மானின் திருமணம் பற்றிய கேள்விக்கு பதிலளித்தாவது... ‛‛எனக்கும் சல்மானுக்கும் தனிப்பட்ட முறையில் நெருக்கம் எதுவும் கிடையாது. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் அவ்வளவு தான். அவரின் திருமணம் நடக்க வேண்டிய நேரத்தில் நிச்சயம் நல்லபடியாக நடக்கும்'' என்று கூறியுள்ளார்.