ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
செல்வராகவனிடம் உதவியாளராக இருந்தவர் மித்ரன் ஜவஹர். செல்வராகவன் தெலுங்கில் இயக்கிய ஆடவரி மாட்டுலேகு அர்திலே வீரலே என்ற படத்தை தமிழில் யாரடி நீ மோகினி என்ற பெயரில் ரீமேக் செய்தார். அன்று தொடங்கிய அவரது ரீமேக் பயணம் இன்று வரை தொடர்கிறது. தெலுங்கு ஆர்யாவை குட்டி என்ற பெயரில் ரீமேக் செய்தார். ரெடி படத்தை உத்தம புத்திரன் என்ற பெயரில் ரீமேக் செய்தார். தற்போது மலையாள தட்டையன் மறயத்து படத்தை மீண்டும் ஒரு காதல் கதையாக ரீமேக் செய்துள்ளார். ஆனால் எனக்கு ரீமேக் செய்வதில் உடன்பாடில்லை. ரீமேக் செய்ய என்னை கட்டாயப்படுத்துகிறார்கள் என்கிறார் மித்ரன் ஜவஹர்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: என்னை பொறுத்த வரை ரீமேக் என்பது கடினமான ஒரு விஷயமாகும். ரீமேக் படங்கள் இயக்குவதில் எனக்கு எப்போதும் உடன்பாடு கிடையாது. யாரடி நீ மோகினி படம் வெளியான சமயத்தில் இருந்தே நான் இதை கூறி வருகிறேன். ஒரு படம் வெற்றி அடைந்துவிட்டால் அதைப்போன்று ஒரு படத்தை இயக்கும்படி எல்லோரும் கேட்பது இயல்பு. நான் இயக்கிய ரீமேக் படங்கள் வெற்றி பெற்றதால் என்னை மீண்டும் ரீமேக் படங்களை இயக்கும் படி எல்லோரும் கேட்கிறார்கள்.
ரீமேக் படம் என்றாலும் இப்படத்தில் என்னுடைய முத்திரை என்பது நிச்சயம் இருக்கும். இப்படத்தில் வேறு விதமான பாடல்கள் இருக்கும் , காட்சி அமைப்பு வேறு விதமாக இருக்கும். தட்டத்தின் மறையத்து படத்தின் மூலக்கதையை மட்டும் எடுத்துக்கொண்டு , படத்தை நாங்கள் வேறு விதமாக எடுத்துள்ளோம். மீண்டும் ஒரு காதல் கதைக்கு என்ன தேவையோ அதை நாங்கள் சரியாக செய்துள்ளோம்'' என்கிறார் மித்ரன் ஜவஹர்.