அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' |
சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து அதிக படங்கள் இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன். 25 படங்கள் இயக்கி உள்ளார். அவரே ஒரு ரஜினி படத்தை இயக்க மறுத்தார். அந்தப் படம் ரஜினியின் 100வது படமான ஸ்ரீராகவேந்திரா.
சூப்பர் ஸ்டார் ரஜினி, ஸ்ரீராகவேந்திரரின் தீவிர பக்தர். அதனால் தனது 100 வது படமாக ஸ்ரீராகவேந்திரர் கதையில் அவராக நடிக்க வேண்டும் என்ற ஆசைப்பட்டார். தன் ஆசையை தனது குருநாதர் கே.பாலச்சந்தரிடம் சொன்னபோது "நானே தயாரிக்கிறேன். எஸ்.பி.முத்துராமன் இயக்கட்டும்" என்று கூறினார்.
மறுநாள் ரஜினி எஸ்.பி.முத்துராமனை அழைத்து எனது கனவு படமான ஸ்ரீராகவேந்திராவை நீங்கள்தான் இயக்க வேண்டும் என்றார். அதைக் கேட்டு எஸ்.பி.முத்துராமன் அதிர்ச்சி அடைந்தார். "நான் கமர்ஷியல் இயக்குனர் புராண படங்கள் இயக்கிய அனுபவமில்லை. அதுவும் நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் நான் எப்படி ராகேவந்திரரை இயக்க முடியும்" என்று கூறிவிட்டார். இந்த தகவலை ரஜினி கே.பாலச்சந்திரம் கூறினார். "முத்து சார் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. நீங்கள் வேறு டைரக்டர் பாருங்கள்" என்று கூறிவிட்டார்.
கே.பாலச்சந்தர், எஸ்.பி.முத்துராமனை அழைத்துப் பேசினார். "நீங்கள் நல்ல இயக்குனர். எந்த ஜார்னர்லேயும் உங்களால் படம் எடுக்க முடியும். ஒரு ஸ்கிரிப்டை கெடுக்காமல் உங்களால்தான் எடுக்க முடியும். இதை ஏன் புராண படமாக பார்க்கிறீர்கள். உங்களுக்கு தரப்படுகிற ஸ்கிரிப்டை படமாக எடுத்து தாருங்கள் என்று கேட்கிறோம். புராண படங்களையும் இயக்க முடியும் என்பதை நிரூபியுங்கள்" என்றார். அப்போதும் எஸ்.பி.முத்துராமன் ஒத்துக் கொள்ளவில்லை. "ரஜினி ஒரு மாஸ் ஹீரோ, அவரை ஒரு சன்னியாசியாக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். படம் ஓடாது. உங்களுக்கு நஷ்டம் வரும். அது என்னால் வர விரும்பவில்லை" என்றார். அதற்கு கே.பாலசந்தர் "நஷ்டத்தை பற்றி கவலைப்படாதீர்கள். ரஜினியின் 100 வது படத்தை நான் தயாரிப்பதே எனக்கு லாபம்தான். நீங்கள் தைரியமாக செய்யுங்கள்" என்று கூறிவிட்டு மறுநாளே பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுத்துவிட்டார்.
1985ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் ரஜனி, ஸ்ரீராகவேந்திரராகவே வாழ்ந்தார். லட்சுமி அவரது மனைவியாக நடித்தார். இளையராஜா இசை அமைத்தார். டி.எஸ்.விநாயகம் ஒளிப்பதிவு செய்தார். எல்லாம் இருந்தும் கடைசியில் எஸ்.பி.முத்துராமன் சென்னபடிதான் நடந்தது. அதாவது ரஜினியின் 100வது படம் தோல்வி படமாக அமைந்தது.