'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தற்போது சினிமாவில் குறிப்பிடத்தக்க காமெடியனாகி விட்டார் இமான் அண்ணாச்சி. காக்கி சட்டை போன்ற சில படங்களில் ஹீரோக்களுடன் படம் முழுக்க வரும் காமெடியனாகவும் நடித்துள்ள இமான் அண்ணாச்சி, பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள தொடரி படத்தில் பிரதான காமெடியனாக நடித்துள்ளார். படம் முழுக்க ரயிலுக்குள் நடக்கும் கதை என்பதால் போரடிக் கக்கூடாது என்பதற்காக இமான் அண்ணாச்சி, தம்பி ராமைய்யா சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகளை அதிகமாக படத்தில் வைத்துள்ளாராம் பிரபுசாலமன்.
ஆனால், இறுதிகட்ட பணிகள் அனைத்தும் முடிவடைந்து தனுஷ் படத்தை பார்த்தபோது, காமெடி காட்சிகள் அதிகமாக இருப்பதாக உணர்ந்தவர், பல காட்சிகளை கத்தரிக்க சொல்லி விட்டாராம். அப்படி அவர் சொன்னதில் தம்பி ராமைய்யா காட்சிகள் தப்பியபோதும், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட மேலும் சில காமெடியன்கள் நடித்த காட்சிகள் நிறையவே கத்தரிக்கு இறையாகி விட்டதாம். இதனால் பிரபுசாலமன் படத்தில் தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த காமெடி யன் வேடம் என்ற மகிழ்ச்சியில் இருந்த இமான் அண்ணாச்சி, தான் நடித்த பல காட்சிகள் கத்தரிக்கப்பட்ட சேதி அறிந்து வெளியில் சொல்ல முடியாத அதிர்ச்சியில் இருக்கிறாராம்.