அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
நான் ஈ படத்தில் தமிழுக்கு வந்தவர் கன்னட நடிகர் சுதீப். அதையடுத்து விஜய் நடித்த புலி படத்தில் நடித்தவர், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய முடிஞ்சா இவன புடி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதையடுத்தும் தொடர்ந்து தமிழ், கன்னடம் என இரண்டு மொழிகளிலும் நாயகனாக நடிக்க ஆசைப்பட்டார். ஆனால் முடிஞ்சா இவன புடி படம் வெற்றி பெறாததால் சுதீப்பின் ஹீரோ ஆசை ஒர்க்அவுட்டாகவில்லை. அதனால் மறுபடியும் தமிழில் ஹீரோவாக நடிப்பதற்கு அவர் ஆசைப்படவில்லை.
அதேசமயம் வில்லனாக தமிழில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறார் சுதீப். ஏற்கனவே விஜய்யுடன் புலி படத்தில் நடித்துவிட்ட அவர், அடுத்து அஜீத்துடன் நடிக்க வேண்டும் என்கிற தனது விருப்பத்தை தெரிவித்து வருகிறார். அதோடு, அஜீத்துடன் நான் இதுவரை நடிக்கவில்லை என்றபோதும் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். அவ்வப்போது சினிமா குறித்த விசயங்களை தொலைபேசியில் பகிர்ந்து கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார் சுதீப்.
ஆக, ஏற்கனவே கன்னட சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்து கொடி நாட்டி வரும் பிரகாஷ்ராஜ், கிஷோருக்கு அடுத்தபடியாக சுதீப்பும் இனிமேல் கோடம்பாக்கத்தில் நிரந்தர வில்லனாகி விடுவார் என்று தெரிகிறது.