இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா-ஸ்ருதிஹாசன் நடித்த படம் ஏழாம் அறிவு. இந்த படத்தில் டிஎன்ஏ சம்பந்தப்பட்ட கதையை அவர் படமாக்கியிருந்தார். சீனாவில் இருந்து இந்தியாவிற்குள் வந்து நோய் கிருமிகளை பரப்பி விடும் வில்லனை, போதி தர்மரின் வழியில் வந்தவரான சூர்யாவின் டிஎன்ஏவை தூண்டி விட்டு, வில்லனை அழிப்பதுதான் அந்த படம். அதைத் தொடர்ந்து தற்போது மகேஷ்பாபுவை நாயகனாக வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் வாஸ்கோடகாமா படமும் சயின்ஸ் சம்பந்தப்பட்ட கதையில்தான் உருவாகி வருகிறதாம்.
கதைப்படி இந்த படத்தில் மகேஷ்பாபு சயின்டிஸ்டாக நடிக்கிறாராம். அதாவது ஷங்கர் இயக்கத்தில் உருவான எந்திரன் படத்தில் சயின்டிஸ்டாக நடித்த ரஜினி ரோபோவை உருவாக்குவது போன்று, இந்த படத்தில் மகேஷ்பாபு ஒரு மனிதனை உருவாக்குகிறாராம். எதைக்கொண்டு, எப்படி அவர் அந்த மனிதனை உருவாக்குகிறார்? அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பதுதான் இந்த படமாம். அந்த வகையில், இந்த படத்திற்காக சில மருத்துவத்துறையை சார்ந்த வர்களின் ஆலோசனைகளைப்பெற்று திரைக்கதையை ரெடி பண்ணியிருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ்.