தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற பாகுபலி திரைப்படத்தில் நடித்த நாயகன் பிரபாஸ் மூன்று வருடங்களுக்கும் மேலாக பாகுபலி படத்திற்காக மட்டும் உழைத்து வருகின்றார். பாகுபலி படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை எட்டவிருக்கும் நிலையில் நாயகன் பிரபாஸ் டிசம்பரில் தனது அடுத்த படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். இயக்குனர் சுஜீத் இயக்கும் ஆக்ஷன் திரில்லர் படத்தில் பிரபாஸ் போலீஸாக நடிக்கவுள்ளார். இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கின்றது. எமி ஜாக்சன் நாயகியாக நடிக்கின்றார். பாகுபலி -2 படத்தின் படப்பிடிப்புகள் நிறைவுபெற்ற பின்னர், பிரபாஸ் டிசம்பரில் நடைபெறும் இப்படத்தின் படப்பிடிப்புகளில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகின்றது. தற்போது ப்ரீ புரொடக்ஷன் பணிகளை துவக்கியுள்ள சுஜீத் தொழில்நுட்ப கலைஞர்களுக்கான தேடலிலும் ஈடுபட்டுள்ளாராம்.